Posts

Showing posts from November, 2020

கட்டில் பேசுகிறது

Image
கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து, என்னைக் கொண்டுபோய்க் கிடத்தினார்கள். எனது இரண்டு பக்கங்களிலும் என்னைப் போல் பல நோயாளிகள். முக்கலும் முனங்கலும் நரகத்தின் உதாரணம் மாதிரி. ஒவ்வொரு கட்டிலின் பக்கத்திலும் மருந்தையும் கஞ்சியையும் வைக்க ஒரு சிறு அலமாரி. கட்டில் கம்பியில், டாக்டரின் வெற்றி அல்லது வியாதியின் வெற்றி – இரண்டிலொன்றைக் காண்பிக்கும் ‘சார்ட்’ என்ற படம். ஹாலின் மத்தியில் ஒரு மின்சார விளக்கு; தூங்கும்பொழுது கண்களை உறுத்தாதபடி அதற்கு மங்கலான ஒரு ‘டோம்’. அதன்கீழ் வெள்ளை வர்ணம் பூசிய ஒரு மேஜை, நாற்காலி. அதில் வெள்ளுடை தரித்து, ‘ஆஸ்பத்திரி முக்கா’டிட்ட ஒரு நர்ஸ் என்னவோ எழுதிக்கொண்டிருக்கிறாள். ஒன்றையும் பற்றாமல் சலித்துக்கொண்டிருக்கும் மனம். ஐயோ! மறுபடியும் அந்த வயிற்றுவலி. குடலையே பிய்த்துக் கொண்டு வந்துவிடும் போலிருக்கிறதே! ஒரு கையால் வயிற்றை அமுக்கிக் கொண்டு ஒரு புறமாகத் திரும்பிப் படுத்தேன். சீ! ‘ஸ்பிரிங்’ கட்டிலாம்! என்னமாக உறுத்துகிறது! சற்று அயர்வு… என்ன வேடிக்கை! கட்டில் என்னுடன

கைதிகள் ஜெயமோகன்

Image
#கைதிகள் #ஜெயமோகன் #சிறுகதை எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை வயர்லெஸ் ரேடியோ சொல்லிக்கொண்டிருந்தது. குழூக்குறி என் மண்டைக்குள் சென்று தீண்ட ஒரு நிமிடம் ஆகியது. ‘…நரி மாட்டிக்கொண்டு விட்டது’ நான் பரபரப்புடன் ஓடிப்போய் தரையில் கம்பிளிக்குவியலுக்குள் படுத்திருந்த நாராயணனை ஓங்கி உதைத்தேன். ‘ஆ!’ என்று அலறியபடி அவன் கண்விழித்து எழுந்து அமர்ந்து மணல்பையைக் குத்துவது போலக் கைகளை ஆட்டியபடி ‘போ போ போ’ என்று கத்தினான். இந்த முகாமில் ஒவ்வொருவரும் பொந்துக்குள் அஞ்சி ஒடுங்கி ஒளிந்திருக்கும் காட்டுமிருகம் போலத்தான் இருக்கிறார்கள். ’டேய்…நாந்தாண்டா..டேய் நாராயணா’ அவன் வாயைத் துடைத்துக்கொண்டு ‘’ஏண்டா?’ என்று சலித்தபின் மீண்டும் படுக்கப்போனான். ‘டேய் அவன் மாட்டியாச்சுடா…’ ‘யாரு?’ என்றான். ‘உங்க அப்பன் தெரவியம்..டேய் அவன்…நரி’ நாராயணன் வாய் திறந்தபடி நின்றுவிட்டது. ‘எப்ப?’ என்றான். ’தெரியல்லை. ராத்திரின்னு நெனைக்கறேன்..இப்பதான் மைக்ல கேட்டேன். யாரோ எங்கேயோ சொல்லிட்டிருக்காங்க’ நாரா